போலி ஆவணங்கள் சமர்ப்பித்த அரசு அதிகாரி கைது!

- Sangeetha K Loganathan
- 21 Jan, 2025
ஜனவரி 21,
பெர்லிஸ் மாநில அரசுத் துறையில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது தொடர்பான விசாரணையில் சம்மந்தப்பட்டுள்ள அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் RM132,000.00 மோசடி செய்ததாக 28 வயதுடைய மாநில அரசு அதிகாரி ஒருவர் பெர்லீஸ் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் மாநில இயக்குநர் Mohd Nor Adha Ab Gani தெரிவித்தார்.
முஸ்லீம்களுக்கானச் சிறப்பு MUALAF நிதி ஒதுக்கீடு தொடர்பாக 49 பேருக்குப் போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்த நிலையில் இது தொடர்பாக 28 வயது அரசு அதிகாரி நேற்று மாலை 4.30 மணிக்குப் பெர்லிஸ் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்டதாக Mohd Nor Adha Ab Gani உறுதிப்படுத்தினார்.
மேலதிக விசாரணைக்காக அவர் 6 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் போலி ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் Mohd Nor Adha Ab Gani தெரிவித்தார்.
Pegawai kerajaan Perlis berusia 28 tahun ditahan SPRM atas tuduhan menipu RM132,000 melalui dokumen palsu berkaitan dana khas Mualaf. Suspek direman selama enam hari untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *