பணமோசடி வழக்கில் 2 சுகாதாரப் பயிற்சியாளர்கள் கைது! – SPRM

- Sangeetha K Loganathan
- 22 Jan, 2025
ஜனவரி 22,
லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC நேற்று மலாக்காவைச் சேர்ந்த பாதுகாப்புப் படை சுகாதாரப் பயிற்சியாளர்கள் இருவரைப் பணமோசடி வழக்கில் கைது செய்தது. நேற்று மாலை 5.30 மணிக்குச் சுகாதாரப் பயிற்சியாளர்களான 30 வயது 40 வயது என 2 அதிகாரிகளிடம் மலாக்கா மாநில SPRM அலுவலகத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில SPRM இயக்குநர் Adi Supian Shafie தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினர்களுக்கானச் சுகாதாரப் பயிற்சியின் போது சுமார் RM26,000.00 ரிங்கிட் மதிப்பிலானப் பணம் மோசடிக்குள்ளானதாகக் கண்டறியப்பட்டதில் போலி ஆவணங்களையும் மதிப்பீடுகளையும் வழங்கிய 2 பயிற்சியாளர்களையும் நேற்று முதல் 6 நாள்கள் விசாரணைக் காவலில் தடுத்து வைக்கும்படி மலாக்கா Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Dua jurulatih kesihatan berusia 30 dan 40 tahun ditahan SPRM di Melaka atas dakwaan penipuan RM26,000 dalam program latihan kesihatan 2023. Mereka kini direman enam hari untuk siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *