பாதுகாப்பு மையத்தில் வளர்ந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த பாதுகாவலர்!

- Sangeetha K Loganathan
- 07 Dec, 2024
டிசம்பர் 7,
பெற்றோர் இல்லாமல் சிறுவயது மதல் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த 17 வயது பெண், ஆதரவற்றோர் இல்லத்தின் பாதுகாவலர் மீது பாலியல் புகார் அளித்த நிலையில் 59 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Kulai மாவட்டக் காவல் ஆணையர் Tang Seng Lee தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணைக் கடந்த 4 ஆண்டுகளாகப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் 13 வயதிலிருந்தே கொடுமைப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட பாதுகாவலரின் வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்டதாகவும் ஆதாரங்களின் அடிப்படையில் 59 வயது ஆடவரைக் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Seorang penjaga sebuah rumah anak yatim yang berusia 59 tahun ditahan atas kes rogol seorang penghuni yang berumur 17 tahun. Mangsa disyaki dirogo sejak 2020 hingga 2022. Suspek direman untuk siasatan lebih lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *