இறைமறுப்பாளர்களைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்! – ராயர் வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 20 Dec, 2024
டிசம்பர் 20,
மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை அரசாங்கம் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வலியுறுத்தியது. கடவுள் மறுப்பாளர்களின் உருவங்களைக் கொண்டு அனைத்துலக இளைஞர் பகுத்தறிவு நிகழ்ச்சி தலைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அது முற்றிலும் இந்து சமயக் கொள்கைகளுக்கு எதிரானக் கருத்துகளைக் கொண்டது என்பதாலும் தேசிய இறையாண்மைக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான RSN Rayer தெரிவித்தார்,
இது தொடர்பாக உள்துறை அமைச்சுக்கு நடவடிக்கை எடுக்க கோரி, வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலான நிகழ்ச்சிகளைப் பொதுமக்களும் புறக்கணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Lembaga Wakaf Hindu Pulau Pinang menolak ideologi ateistik yang menjejaskan keharmonian agama dan nilai Rukunegara. Mereka menggesa KDN mengambil tindakan terhadap Forum Rasionalisme Belia Antarabangsa 2.0 dan menyeru inisiatif memupuk perpaduan dalam masyarakat pelbagai kaum Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *