பேருந்தில் மோதி 63 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி!

- Sangeetha K Loganathan
- 08 Feb, 2025
பிப்ரவரி 8,
இன்று அதிகாலை சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொழிலாளர் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 63 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிகாலை 6.18 மணிக்கு Jalan Teluk Kumbar சாலையில் இவ்விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பேருந்தின் பின்னால் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த 63 வயது முதியவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக BALIK PULAU மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Seorang lelaki berusia 63 tahun maut selepas motosikalnya merempuh belakang bas pekerja yang diparkir di Jalan Teluk Kumbar. Kemalangan berlaku pada 6.18 pagi akibat kehilangan kawalan. Mayat mangsa dihantar ke Hospital Balik Pulau untuk bedah siasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *