5kg போதைப்பொருள் பறிமுதல்! ஆடவர் தப்பி ஓட்டம்!

top-news

ஏப்ரல் 10,

இன்று அதிகாலை போக்குவரத்து சோதனையின் போது சந்தேகத்திற்குரிய மோட்டால் சைக்கிளோட்டி தப்பிக்க முயற்சி செய்ததாகவும் காவல்துறையினர் துரத்தியதும் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் உள்ள பையிலிருந்து 5 கிலோ எடையிலானப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தப்பி ஓடிய மோட்டார் சைக்கிளோட்டியை அடையாளம் கண்டுள்ளதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு RM 15,500 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளின் பதிவு எண்கள் போலியானது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Polis merampas 5 kg dadah bernilai RM15,500 selepas seorang penunggang motosikal cuba melarikan diri semasa pemeriksaan trafik. Motosikal tersebut didapati mempunyai nombor pendaftaran palsu, dan suspek berjaya melarikan diri selepas meninggalkan motosikalnya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *