RM78,000 மதிப்பிலான மரக்கட்டைகளைக் கடத்திய ஐவர் கைது!

top-news

பிப்ரவரி 4,

சட்டவிரோதமாக மரக்கட்டைகளைக் கடத்த முயன்ற ஒரு பெண் உட்பட ஐவர் நேற்று நண்பகல் 3 மணியளவில் எல்லை பாதுகாப்பு கடத்தல் ஒழிப்புச் சிறப்புப் படையினர் கைது செய்தனர். தெரங்கானுவில் உள்ள Padang Landak பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த HILUX வாகனத்தில் 780 கிலோ எடையிலான மரக்கட்டைகள் இருப்பதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட நால்வரும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து உரிமம் இல்லாமல் மரக்கட்டைகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் மரக்கட்டைகளின் மதிப்பு உள்ளூர் சந்தையில் RM78,000 என கணக்கிடப்பட்டுள்ளது.

Seorang wanita dan empat lelaki ditahan oleh pasukan khas kawalan sempadan kerana menyeludup kayu balak secara haram di Padang Landak, Terengganu. Sebanyak 780kg kayu balak bernilai RM78,000 dirampas dan dipercayai dari kawasan hutan simpan tanpa kebenaran.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *