தேங்காய் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 13 பேர் கைது! 8 TRELER லாரிகள் பறிமுதல்!

top-news

பிப்ரவரி 7,

கிளாந்தான் வழியாகத் தாய்லாந்துக்குத் தேங்காய்களைக் கடத்த முயன்ற 13 பேரை எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவினர் கைது செய்தனர். கிளாந்தான் TUMPAT சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் சம்பந்தப்பட்ட லாரிகளைச் சோதனையிட்டதில் 317,000 தேங்காய்கள் சட்டவிரோதமாகத் தாய்லாந்துக்குக் கடத்தப்படுவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக மலேசியாவில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 13 பேரும் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதால் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 13 பேரும் 19 முதல் 70 வயதினர் என்றும் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளின் தேங்காயின் மொத்த மதிப்பு 8.3 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

Pihak berkuasa menahan 13 individu berusia 19 hingga 70 tahun yang cuba menyeludup 317,000 biji kelapa ke Thailand melalui Kelantan. Lapan treler dirampas dengan nilai keseluruhan RM8.3 juta. Suspek ditahan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *