40 லிட்டர் பெட்ரோலைத் தாய்லாந்துக்குக் கடத்த முயன்ற 17 வயது ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 29 Jan, 2025
ஜனவரி 29,
கிளாந்தான் வழியாகத் தாய்லாந்துக்கு 40 லிட்டர் பெட்ரோலைக் கடத்த முயன்ற 17 வயது உள்ளூர் ஆடவரை எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படை (Pasukan Gerakan Am - PGA) கைது செய்தது. நேற்று காலை 11 மணியளவில் சந்தேகத்திற்குரிய ஆடவர் மோட்டார் சைக்கிளில் Rantau Panjang பகுதியில் சுற்றி திரிவதைக் கண்ட அதிகாரிகள் சோதனையிட்டதாகச் சிறப்புப் படை தலைமை இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab Hamid தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் RM6,082 மதிப்புள்ள 40 லிட்டருக்கும் அதிகமான பெட்ரோல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தாய்லாந்துக் கடத்த முயன்றதாகக் கைது செய்யப்பட்ட 17 வயது ஆடவர் வாக்குமூலம் அளித்ததாகவும் Datuk Nik Ros Azhan Nik Ab Hamid தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 17 வயது ஆடவரை Pasir Mas காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
Seorang lelaki berusia 17 tahun ditangkap oleh Pasukan Gerakan Am (PGA) kerana cuba menyeludup 40 liter petrol bernilai RM6,082 ke Thailand melalui Rantau Panjang. Suspek ditahan dan disiasat di balai polis Pasir Mas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *