எல்லை பகுதியில் துப்பாக்கித் தோட்டாக்களுடன் வெளிநாட்டினர் கைது!

top-news

ஜனவரி 28,

மலேசியாவின் மேற்கு கடல் வழியாக அனுமதியில்லாமல் மலேசிய எல்லைக்குள் நுழைந்த படகைக் காவல்துறையினர் சோதனையிட்டதில் M4 ரக துப்பாக்கிகளும் கைத்துப்பாக்கிகளும் 801 தோட்டக்களுடன் 2 வெளிநாட்டினர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பினாங்கு மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் உள்ளூர் ஆடவர்கள் என்றும் இருவர் இந்தோனேசியர்கள் என்றும் அவர் தெரிவித்தார். சுற்றுலா கடப்பிதழில் மலேசியாவுக்குள் வந்து, மீண்டும் சட்டவிரோதமாகத் தாய்லாந்துக்குச் சென்று துப்பாக்கிகளை மலேசியாவுக்குள் கொண்டு வரும்போது இந்தோனேசியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் மலேசியாவுக்குள் ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கான நோக்கத்தையும் ஆராய்ந்து வருவதாக பினாங்கு மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார்.

Empat individu termasuk dua warga Indonesia ditahan bersama senjata api M4, pistol dan 801 peluru di sempadan laut barat Malaysia. Suspek dipercayai menyeludup senjata dari Thailand ke Malaysia secara haram.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *