பேராக்கில் பெர்சத்துவுக்கு வாய்ப்பில்லை! ஓரமாக விளையாடுங்கள்! Saarani Mohamad கிண்டல்!

top-news

டிசம்பர் 14,

பேராக்கைப் பெர்சத்து கைப்பற்றும் நாள் வெகுதூரமில்லை பெர்சத்து தலைமையிலான அரசைப் பேராக்கில் அமைப்பது தமது லட்சியம் என்றும்  பெர்சத்து தலைவர் Tan Sri Muhyiddin Yassin அறிவித்ததைப் பேராக் மெந்திரி பெசாரும் பேராக் மாநிலப் பாரிசான் தலைவருமான Datuk Seri Saarani Mohamad ஓரமாக விளையாடுங்கள் என நக்கலடித்தார்.

தேர்தல் முடிந்து ஆட்சியைக் கவிழ்க்கும்படியானச் செயலை முன்னெடுக்கும் எந்தவோர் அரசியல் கட்சியும் முதிர்ச்சி அடையாத கட்சி என Datuk Seri Saarani Mohamad தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டதும் சூளுரையுங்கள், தேர்தலுக்குப் பின் பெற்ற தோல்வியை ஏற்று அரசியல் செய்யுங்கள். அதை விடுத்து ஆட்சியைக் கவிழ்ப்போம், இடைத்தேர்தலை உருவாக்குவோம் என நகைச்சுவைக் காட்ட வேண்டாம் என Datuk Seri Saarani Mohamad பெர்சத்துவுக்கு அறிவுருத்தினார்.

அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசான் ஒரு சில மாநிலங்களைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருப்பது உண்மை தான், ஆனால் அதை இப்போது சொல்வதில் பயனில்லை. மக்களிடையே தேவையற்ற பதற்றத்தை மட்டுமே அது ஏற்படுத்தும். தேர்தல் வரையில் பொறுத்து இருங்கள் என Datuk Seri Saarani Mohamad தெரிவித்தார்.

Datuk Seri Saarani Mohamad menyindir Tan Sri Muhyiddin Yassin yang bercadang menubuhkan kerajaan Bersatu di Perak. Beliau menegaskan tindakan menggulingkan kerajaan menunjukkan ketidakmatangan politik dan menyarankan Bersatu menunggu pilihan raya tanpa mencetuskan kekecohan atau ketegangan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *