ரயிலைச் சேதப்படுத்திய கும்பல்! காவல் துறை நடவடிக்கை! – தலைநகர்

top-news

டிசம்பர் 22,

கால்பந்து ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் Tasik Selatan LRT நிலையத்தில் இரு கால்பந்து ரசிகர்களின் கும்பலுக்கும் கைகலப்பு மூண்டது. இதில் LRT ரயிலின் கண்ணாடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் LRT நிலையத்தில் உள்ள பொருள்களும் சேதமடைந்ததாகவும் Cheras மாவட்டக் காவல் ஆணையர் Aidil Bolhassan தெரிவித்தார்.

இது தொடர்பானக் காணொலி சமூக வலைத்தளத்திலும் அதிகமாகப் பரவிய நிலையில் கைகலப்பில் ஈடுப்பட்டது சிங்கப்பூர் மலேசியா இரு நாடுகளின் கால்பந்து ஆதரவாளர்கள் என அறியப்பட்டுள்ளது.

சுமார் 8 நிமிடங்கள் கொண்ட காணொலி சமூக வலைத்தளத்தில் பரவினாலும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை என்றாலும் காணொலியின் அடிப்படையில் சிலரை அடையாளம் கண்டு அவர்களை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி வலியுறத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Dua kumpulan penyokong bola sepak bergaduh di Stesen LRT Tasik Selatan selepas menonton perlawanan Malaysia-Singapura, menyebabkan kerosakan tren dan kekecohan. Polis meleraikan insiden melibatkan 20-30 orang. Tiada tangkapan setakat ini, siasatan diteruskan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *