5 மில்லியன் மாணவர்களுடன் தொடங்கும் 2025 ஆம் பள்ளிக்காலாண்டு!

top-news

பிப்ரவரி 2,

இன்று முதல் தொடக்கப்பள்ளியின் 2025 ஆம் ஆண்டுக்கானப் பள்ளி காலாண்டு தொடங்கும் நிலையில் மலேசியா முழுவதும் 5 மில்லியனுக்கும் மேலான மாணவர்கள் முதல் நாள் பள்ளிக்கு வந்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று திரங்கானு, கிளாந்தான், கெடா மாநிலங்களில் முதல் நாள் பள்ளி தொடங்கிய நிலையில் இன்று பேராக், பினாங்கு, சிலாங்கூர், பகாங், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், ஜொகூர், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் முதல் நாள் வகுப்பு தொடங்கியது. 

பேராக்கில் 1105 பள்ளிகளில் 329,344 மாணவர்களும், சபாவில் 1298 பள்ளிகளில் 52637 மாணவர்களும், பினாங்கில் 235,305 மாணவர்களும், திரங்கானு, கிளாந்தான், கெடா மாநிலங்களில் 632,268 மாணவர்களும் ஜொகூரில் 585,220 மாணவர்களும் மலாக்காவில் 153813 மாணவர்களும் கல்வியைத் தொடர்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sesi persekolahan 2025/2026 bermula lancar di seluruh negara, melibatkan hampir lima juta pelajar. Sekolah di Terengganu, Kelantan, dan Kedah dibuka semalam, manakala negeri lain termasuk Johor, Selangor, dan Sabah memulakan sesi hari ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *