வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஒருவர் நேற்று போலீசாரால் கைது!

top-news
FREE WEBSITE AD

பட்டர்வொர்த், ஜன 20:

கடந்த சனிக்கிழமையன்று இங்குள்ள ஜாலான் செயின் ஃபெர்ரியில்  எதிர் திசையில் வாகனத்தை ஓட்டி  மூன்று வாகனங்களுக்கு விபத்து ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று மதியம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட மிட்சுபிஷி லான்சர் வாகனத்தின்  28 வயது ஓட்டுநர் மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும், ஆரம்பக்கட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் எதுவும் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாகவும் Seberang Perai Utara (SPU) மாவட்ட காவல்துறைத் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இரத்தப் பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணைக்கு ரிமாண்ட் விண்ணப்பம் செய்யப்படும்," என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.இந்த விபத்தில் இரண்டு கார்களின் ஓட்டுநர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 42(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அனுவார் அப்துல் ரஹ்மான் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *