போலி முதலீட்டில் RM 1.36 மில்லியன் இழந்த விமானி!

top-news

ஜனவரி 7,

சமூக வலைத்தளத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட போலி மூதலீட்டில் சிலாங்கூரைச் சேர்ந்த 50 வயது விமானி RM 1,366,885  பணத்தை இழந்துள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் DATUL HUSSEIN OMAR KHAN தெரிவித்தார். 

அதிகமான லாபம் பெறுவதாகச் சமூகவலைத்தளத்தில் முதலீட்டு நிறுவனத்தில் தனது பணத்தைக் கடந்த ஆண்டு அக்தோபர் மாதம் முதலீடு செய்த ஆடவர் கடந்த டிசம்பர் RM 4,300 மட்டுமே லாபமாகப் பெற்றதாகவும்  தாம் முதலீடு செய்த RM 1,366,885  பணம் குறித்தான எந்தவொரு தகவலும் இல்லை என காவல் துறையில் புகார் அளித்துள்ளார். 

முதலீட்டில் பணம் செலுத்துவதாக எண்ணி 10 வெவ்வேறு வெளிநாட்டு வங்கிகளுக்கு 34 முறை பணப் பரிவர்த்தனையை அவர் செய்துள்ளார். BANK NEGARA அங்கீகரிக்காத எந்தவொரு முதலீட்டிலும் பணம் முதலீடு செய்ய வேண்டாம் என  சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் DATUL HUSSEIN OMAR KHAN எச்சரித்தார். 

Seorang juruterbang rugi lebih RM1.36 juta akibat skim pelaburan palsu di Instagram. Mangsa membuat 34 transaksi ke 10 akaun antara Oktober hingga Disember 2024.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *