MRR2 சாலையோர பயன்பாட்டு குழியிலிருந்து கேபிள் திருட்டு: 4 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 6–

(MRR2) சாலையோரத்தில் உள்ள பயன்பாட்டு குழியிலிருந்து கேபிள்களைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் கைருல் அனுவார் காலிட் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இந்த காணொளி குறித்து போலீசார் அறிந்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பவம் தொடர்பாக கடந்த முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் ஒருவர் போலீஸ் புகார் அளித்திருந்தது தெரியவந்தது.

புகார்தாரர் வழங்கிய தகவலின்படி, அவர் தனது வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்தியிருந்தபோது, சாம்பல் நிற Honda Odyssey வாகனம் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் சில நபர்கள் பயன்பாட்டு குழியிலிருந்து கேபிள்களை அகற்றிக் கொண்டிருந்ததை அவர் கவனித்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகநபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *