மது போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராகக் கடும் கண்காணிப்பு: போலீஸ் நடவடிக்கை தீவிரம்
- Surendran Sumdraraj
- 02 Apr, 2026
கோலாலம்பூர், ஏப். 2-
மதுபோதையில் வாகனம் ஓட்டுவோரை கண்டறிவதற்காக, போலீசார் சாலைத் தடுப்பு சோதனைகள் (SJR) நடவடிக்கைகளை விரிவாக அதிகரிக்கவுள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (JSPT) இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹிஸ்புல்லா அலி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இரவு நேரம் மற்றும் வார இறுதி நாட்கள் போன்ற அதிக அபாயம் உள்ள நேரங்களிலும், இடங்களிலும் இந்த சோதனைகள் தீவிரமாக நடத்தப்படும் என அவர் கூறினார்.
இந்த ஒருங்கிணைந்த மற்றும் உயர்தாக்கம் கொண்ட நடவடிக்கைகள், சட்டத்தை மீறுபவர்களை உடனடியாகக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல், சாலைப் பயனாளர்களிடையே மனப்பூர்வமான தடுப்பு உணர்வையும் உருவாக்கும் என்று அவர் விளக்கினார்.
மேலும், அதிக அபாயம் உள்ள இடங்களில் அதிகாரிகள் தொடர்ந்து இருப்பது, சாலை விதிகளைப் பின்பற்றும் பழக்கத்தை மக்கள் மத்தியில் உயர்த்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புள்ளிவிவரங்களின்படி மதுபோதையில் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறைவாக இருந்தாலும், ஒரு உயிரிழப்பே கூட குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.
இதனால், பொதுமக்கள் பொறுப்புடன் வாகனம் ஓட்ட வேண்டியது அவசியம் என்றும், பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



