கடைவீதியில் கைகலப்பில் ஈடுபட்ட 10 பேர் கைது!

top-news

பிப்ரவரி 9,

நேற்றிரவு ஜெம்புலில் உள்ள Taman Acbe பஹாவ் சாலையில் கைகலப்பில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 10 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இரவு 10 மணியளவில் ஜெம்புலில் உள்ள Taman Acbe பஹாவ் பகுதியில் கும்பலாகப் பலர் கைகலப்பில் ஈடுபடும்படியானக் காணொலி சமூக வலைத்தலங்களில் பரவியதை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜெம்புல் மாவட்டக் காவல் ஆணையர் Hoo Chang Hook தெரிவித்தார். 

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானதால் கைகலப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 21 முதல் 43 வயதுள்ள 10 பேரும் மேலதிக விசாரணைக்காக 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கைகலப்பில் காயமடைந்த மூவர் ஜெம்புல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஜெம்புல் மாவட்டக் காவல் ஆணையர் Hoo Chang Hook தெரிவித்தார்.

Sepuluh individu ditahan selepas terlibat dalam pergaduhan di Taman Acbe, Bahau susulan kemalangan jalan raya. Polis bertindak selepas video kejadian tular. Tiga mangsa cedera dan menerima rawatan manakala semua suspek direman empat hari untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *