கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வர் கைது!– SERDANG POLIS

top-news

ஜனவரி 31,

சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்ட கும்பலைச் சேர்ந்த 4 உள்ளூர் நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக Serdang, மாவட்டக் காவல் ஆணையர் A. A. Anbalagan தெரிவித்தார். கடந்த ஜனவரி 3 பூச்சோங்கில் உள்ள வீட்டில் கொள்ளையடித்த கும்பலைத் தேடும் நடவடிக்கையின் போது 31 முதல் 55 வயதுடைய ஒரு பெண் உட்பட 3 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் செர்டாங், பெத்தாலிங் ஜெயா, சுபாங் ஜெயா பகுதிகளில் 11 கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது முன்னமே 21 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர்களிடமிருந்து RM40,000 மதிப்பிலானப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக A. A. Anbalagan தெரிவித்தார்.

Polis menahan empat individu termasuk seorang wanita yang terlibat dalam 11 kes rompakan di Selangor. Suspek berusia 31 hingga 55 tahun dan mempunyai 21 rekod jenayah. Barangan bernilai RM40,000 turut dirampas dalam serbuan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *