காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 31 வயது ஆடவர்!

top-news

டிசம்பர் 13,

24 குற்றச் சம்பவங்களுக்காகத் தேடப்பட்டு வந்து 31 வயது உள்ளூர் ஆடவர் இன்று காலை Jeram Pasu சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கிளாந்தான் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார்.தேடப்படும் குற்றவாளியான ஆடவர் கிளாந்தானில் உள்ள மேலூர் பகுதியில் இருப்பதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பகுதியில் காவல் துறையின் சோதனை நடத்தியதில் BEZZA ரக வாகனத்தில் வந்த சந்தேக நபர் காவல் துறை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தற்காப்பிற்காகக் காவல் துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 31 வயது தேடப்படும் குற்றவாளியான உள்ளூர் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரின் வாகனத்திலிருந்து போதைப்பொருள்களும், கடத்தல் துப்பாக்கிகளுடன் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், குற்றவாளியை உயிருடன் பிடித்து குற்றவாளி சம்மந்தப்பட்டுள்ள கும்பலையும் கைது செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் காவல் அதிகாரிகள் செயல்பட்டாலும் எதிர்பாராத விதமாகக் காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தையதாகவும் Datuk Mohd Yusoff Mamat விளக்கமளித்தார்.

Seorang lelaki tempatan berusia 31 tahun yang terlibat dalam 24 jenayah ditembak mati di Jeram Pasu, Kelantan selepas menembak polis. Polis menemui dadah, senjata api, dan peluru dalam kenderaannya. Tindakan polis adalah untuk mempertahankan diri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *