அரசியல்வாதிகளை தவிர்த்து கல்வி அமைச்சர்களாக கல்விமான்களை நியமிப்பீர்-பெற்றோர் அமைப்பு!

- Muthu Kumar
- 07 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 7 -
அரசியல்வாதிகளுக்கு பதிலாக கல்விமான்கள் மத்தியில் ஒருவரை கல்வி அமைச்சராக நியமிக்குமாறு பெற்றோர் ஆலோசனைக் குழு ஒன்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.கல்வி நிபுணத்துவத்தால் கொள்கைகள் வழிநடத்தப்படுவதை உறுதிப்படுத்த இவ்வாறு செய்ய வேண்டும் என்று கோரியுள்ள அவ்வமைப்பு, அரசியல் ரீதியில் கல்வி அமைச்சர் நியமிக்கப்படுவதை அரசாங்கம் கருத்தில் கொள்ளக் கூடாது என்றது.
யூபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் அகற்றப்பட்டது தொடர்பிலான பொறுப்பை, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்கும் அவருக்கு முன்பாக அப்பதவியை வகித்த ரட்ஷி ஜிடினும் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டுக் கொண்டிருப்பது குறித்து, கல்வியில் பெற்றோர்கள் எனும் மலாக்கா நடவடிக்கைக் குழு (மெக்பி) தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
ரட்ஷி கல்வி அமைச்சராக இருந்தபோது, யூபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் கடந்த 2021ஆம் ஆண்டில் அகற்றப்பட்டன. பின்னர் அவை 2022ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அகற்றப்பட்டன.அத்தேர்வுகள் அகற்றப்பட்டது ஒரு தவறு என்று ஃபட்லினா கருதுவதை, ரட்ஷி மீது அவர் “விரலை' காட்டியிருப்பது சுட்டிக் காட்டுவதாக,
மெக்பி தலைவர் மாக் சீ கின் தெரிவித்தார்.
“ஃபட்லினாவிடமிருந்து நாங்கள் பெற்ற தகவலானது, யூபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகள் அகற்றப்பட்டிருக்கக் கூடாது என்பதாகும். ஆனால் அதை சரிசெய்ய அவருக்கு தைரியமில்லை என்று மாக் சீ தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *