வெள்ள பாதிப்புகளை எதிர்கட்சிகள் அரசியலாக்காதீர்-பிரதமர் அன்வார்!

top-news
FREE WEBSITE AD

எதிர்கட்சிகள் வெள்ளத்தை அரசியலாக்குவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று குற்றம் சாட்டினார். குறிப்பாக SPM தேர்வை நடத்துவது தொடர்பாக அவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்று அவர் கூறினார்.

முக்கியமான தேர்வுகளைத் தாமதப்படுத்தாமல் பல ஆண்டு காலமாக மலேசியா இதேபோன்ற சவால்களை எதிர்கொண்டதாக அன்வார் கூறினார்.திரெங்கானுவில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் "குறைந்தபட்சம் 99.9%" மாணவர்கள் தங்கள் தேர்வுகளில்  அமர முடிந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்வுக்கான மாணவர்கள் தற்காலிகமாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.சுவாரஸ்யமாக, கடந்தகால போக்குகள் இத்தகைய வசதிகளில் வைக்கப்படும் மாணவர்கள் பெரும்பாலும் சிறந்த முடிவுகள் அடைவதைக் காட்டுகின்றன," என்று மேலும் அவர் சுட்டிக்காட்டினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *