பிரவாசி மாநாட்டில் தான்.சிறி.டாக்டர் ச.சுப்பிரமணியத்திற்குப் ‘பாரதிய சம்மான்’ விருது!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 10,

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும் மலேசியாவின் முன்னாள் சுகாதார அமைச்சருமான டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்துக்கு ‘பாரதிய சம்மான்’ எனும் உயரிய கௌரவ விருது இந்திய அரசாங்கத்தால் 18 ஆவது பிரவாசி மாநாட்டில் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற 18 ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இந்தியாவின் அதிபர் திரௌபதி முர்மு இவ்விருதினை டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கினார்.  வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சாவளிகளைக் கெளரவிக்கும் உயரிய விருதாக ‘பாரதிய சம்மான்’ விருது விளங்கும் நிலையில் டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்களின் அரசியல் சேவைக்காக இவ்விருதுனைப் பெறுகிறார். 



டாக்டர் சுப்பிரமணியம் 1953 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 தைப்பிங்கில் கே.வி.சதாசிவம் – கல்யாணி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.மருத்துவப் பட்டப்படிப்பை முடித்ததும் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிய இவர் 1995 ஆம் ஆண்டு மலாக்காவிலுள்ள ஊஜோங் பாசிர் கிளையின் ம.இ.கா தலைவராகப் பெறுப்பேற்று அதன்பின்னர் 2004 முதல் 2018 வரை சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். 2004 முதல் 2008 வரை நாடாளுமன்ற செயலாளராகப் பதவி வகித்த அவர் 2008 முதல் 2018 வரை மனித வள அமைச்சராகவும் சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார். 2013 முதல் 2018 வரை மஇகாவின் தேசியத் தலைவராகப் பணியாற்றினார்.


இந்தியாவின் சிறப்புக்குரிய ‘பாரதிய சம்மான்’ விருதை மலேசியாவிலிருந்து துன் ச.சாமிவேலு, டான்ஸ்ரீ ஜி.வடிவேலு, டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் ஆகியோர் பெற்றிருந்த நிலையில் தற்போது . டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அவர்கள் பெற்றிருக்கிறார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *