2025 பிரிட்டிஷ் ஓபனில் கால் இறுதிக்கு முன்னேறினார் ஸ்குவாஷ் வீராங்கனை சிவசங்கரி!

top-news
FREE WEBSITE AD

நாட்டின் முன்னணி மகளிர் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, செவ்வாய்க்கிழமை பர்மிங்காமில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான பிரிட்டிஷ் ஓப்பன் ஸ்குவாஷ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை சடோமி வதனாபேவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போட்டியில், மிகுந்த போராட்ட உணர்வை வெளிப்படுத்தி விடாமுயற்சியுடன் செயல்பட்ட எஸ்.சிவசங்கரி, ஏழாவது தரவரிசை பெற்ற வதனாபேவை 11-9, 11-9, 4-11, 4-11, 11-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

உலக தரவரிசையில் 24ஆவது இடத்தில் இருக்கும் சிவசங்கரி, முதல் இரண்டு செட்களை ஆதிக்கம் செலுத்தி வென்றார். ஆனால், வதனாபே தீவிரமாக எதிர்த்து, அடுத்த இரண்டு செட்களை வென்று ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார். முடிவு செட்டில், கெடாவைச் சேர்ந்த இந்த வீராங்கனை மீண்டும் அமைதியுடன் ஆட்டத்தை கட்டுப்படுத்தி, கால் இறுதி இடத்தை உறுதி செய்தார். சிவசங்கரி, கால் இறுதி ஆட்டத்தில், எகிப்தின் நான்காவது தரவரிசை வீராங்கனை அமினா ஓர்ஃபியை எதிர்கொள்ளவுள்ளார்.

S. Sivasangari mara ke suku akhir Kejohanan Skuasy Terbuka British 2025 selepas menewaskan pemain Jepun Satomi Watanabe dalam perlawanan lima set yang sengit di Birmingham. Beliau bakal menentang pemain Mesir, Amina Orfi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *