ஆண்டுக்கு சுமார் 250,000 பேரின் உயிரைப் பறிக்கின்றது மூளைக்கட்டி நோய்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 9-

மனித உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களில் Brain Tumor என்றழைக்கப்படும் மூளைக் கட்டி நோயும் ஒன்றாகும்.இது ஓர் உயிர்க்கொல்லி நோய் என்று அடிப்படை தகவலை தெரிந்து வைத்திருக்கும் மக்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து அறிந்திருப்பது அரிதாகவே உள்ளது.

எனவே, இந்நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ முன்னேற்றங்களை தெரிவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூன் 8ஆம் தேதி உலக மூளைக்கட்டி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகின்றது.

மூளை ஆரோக்கியம் மற்றும் தடுப்பு எனும் கருப்பொருளில் இவ்வாண்டிற்கான உலக மூளைக்கட்டி தினம் ஆனுசரிக்கப்படுகிறது.
மனிதனின் சிந்தனையாற்றல், செயல், நடத்தை, பேச்சு என அனைத்திற்கும் அடிப்படை மூளையின் இயக்கமே.
இப்படி இருக்க, மூளையில் செல்ஸ் எனப்படும் அணுக்கள் அத்துமீறி வளரும்போது, அவை கட்டிகளாக உருமாறி, மூளைக் கட்டி நோயை ஏற்படுத்துவதாக மலேசிய தேசிய புற்றுநோய் கழகத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் முரளிதரன் முனுசாமி கூறினார்.

'மூளையின் உள்ளே சில இயல்பில்லாத வளர்ச்சிகள் கொண்ட அணுக்கள் வளரக்கூடிய சூழலை உருவாக்குகின்றது. சிலர் இதை மூளை புற்றுநோய் என்று தவறான புரிதலை வைத்திருக்கின்றனர். இதில் நான் எதனை விளக்க கடமைப்பட்டிருக்கின்றேன் என்றால் மூளைக்கட்டிகளில் சில மூளைக்கட்டிகள் தான் புற்றுநோய் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்றார் அவர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *