பிரதமர் வழியில் நான்! – துணை அமைச்சர் ரமணன்!

top-news
FREE WEBSITE AD

பிரதமர் அன்வார் பொதுத்தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி ஊதியமற்ற பிரதமராகத் தாம் இருப்பேன் எனும் உறுதிமொழியைப் பின்பற்றி கடந்த 2023 பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தலில் வெற்றிப் பெற்றதிலிருந்து தற்போது வரையில் தன்னுடைய நாடாளுமன்ற ஊதியமான மொத்தத் தொகையைச் சுங்கை பூலோ மக்களின் மேம்பாட்டுக்காகவும் வழிபாட்டுத் தளங்களுக்காகவும் வழங்கப்படு வருவதைத் துணை அமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோக் ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுவரையில் 5 லட்சத்து ஐம்பதாயிரம் ரிங்கிட் தொகையானத் தமது ஊதியம் உட்பட இதரச் செலவுக்களுக்காக அரசாங்கம் வழங்கும் நிதியைத் தனது சொந்த செலவுக்காகத் தாம் பயன்படுத்தாமல் சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் உள்ள வறுமை நிலை மக்களுக்காகவும் வழிபாட்டுத் தளங்களுக்கும் முறையாக வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தேர்தலின் போது வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர்கள் பலரும் இருக்கலாம். அது அவர்களின் அரசியல். வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்கள் மட்டுமே தலைவர்கள். நான் தலைவரா என்பதை என் செயல்பாடுகள் மட்டுமே உறுதிச் செய்யும். பிரதமராக இருக்கும் அன்வார் தலைவர் என்பதை அவரின் செயல்பாடுகளின் மூலமாக அவர் நிரூபித்து வருகிறார். அவர் வழியில் நான் பயணிக்கிறேன் எனும் பெருமை எனக்கு போதும். நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியைத் தொடர்ந்து செயல்படுத்த எந்தவோர் ஊதியமும் இதுவரையில் பெற்றதில்லை இனியும் பெறமாட்டேன் என துணை அமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோக் ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதியளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *