சமையல் எண்ணெயைப் பதுக்கிய ஆடவர் கைது! – KPDN

- Sangeetha K Loganathan
- 08 Dec, 2024
டிசம்பர் 8,
மானிய விலை பொருள்களைப் பதுக்கி வைப்பதாகப் பேராக் மாநில உள்நாட்டு வாழ்க்கை செலவீன அமைச்சிற்குப் புகார் கிடைத்த நிலையில் சம்மந்தப்பட்ட கடையை நேற்று நண்பகல் 1.30 மணியளவில் சோதனையிட்டதில் 870 kilogram சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளும், 87 கிலோ எடையிலான சமையல் எண்ணெய் போத்தல்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பேராக் மாநில உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறை இயக்குநர் Datuk Kamalludin Ismail தெரிவித்தார்.
38 வயதானக் கடையின் ஊழியர் பதுக்கியதாக முதற்கட்ட விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் அவரைப் பேராக் மாநில உள்நாட்டு வாழ்க்கை செலவீனத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருவதாகவும் கடையின் உரிமையாளரைத் தேடி வருவதாகவும் Datuk Kamalludin Ismail தெரிவித்தார். சம்மந்தப்பட்ட கடையிலிருந்து RM4,567.50 மதிப்பிலான அரசு மானிய விலை பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்
KPDN Perak merampas 870kg minyak masak peket dan 87kg minyak botol melebihi had simpanan di sebuah kedai runcit di Sitiawan. Pemilik premis, 38, disiasat di bawah Akta Kawalan Bekalan 1961. Nilai sitaan dianggarkan RM4,567.50.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *