RM2.6 மில்லியன் மதிப்புள்ள 81.34 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

top-news

டிசம்பர் 27,

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மத்திய சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் RM2.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சம்மந்தப்பட்ட போதைப்பொருள் கார்கோ மூலமாக வெளிநாட்டுக்குக் கடத்த முயன்றதாக மத்திய சுங்கத்துறை இயக்குநர் Norlela Ismail தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 81.34 கிலோ எடையிலான methamphetamine வகை என கண்டறியப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட போதைப்பொருளின் பெட்டியில் உள்ள அனுப்புநரின் முகவரியும் நிறுவனமும் போலியானது என்பதால் சம்மந்தப்பட்டவர்களைத் தேடிவருவதாக அவர் தெரிவித்தார்.

Sungkai KLIA berjaya merampas 81.34 kg dadah jenis methamphetamine bernilai RM2.6 juta yang cuba diseludup ke luar negara melalui kargo. Pengirim disyaki menggunakan identiti palsu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *