RM18.7 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோதக் கொள்கலன்களுடன் 10 பேர் கைது!

- Sangeetha K Loganathan
- 20 Jan, 2025
ஜனவரி 20,
மின் சுத்திகரிப்பு ஆலயத்தில் சட்டவிரோதமாக பல்வேறு கனிமங்களைப் பதுக்கி வைத்திருந்த 10 வெளிநாட்டினர்களைக் காவல் துறை நேற்று கைது செய்துள்ளது. Sungai Buloh பகுதியில் இயங்கி வந்த தொழில்துறை வளாகத்தில் சுமார் 60 டன் அலுமனியம், 280 டன் மின்னணு கனிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக BUKIT AMAN கடத்தல் பிரிவு சிறப்புப் படை இயக்குநர் Jafri Muhamad தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மூவர் மியான்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவர் உள்ளூர் ஆடவர் என்றும், ஒருவர் Bangladesh ஆடவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பதப்படுத்தப்பட்டுள்ள கனிமங்களுடன் சம்மந்தப்பட்ட வளாகம் முறையான உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததால் சம்மந்தப்பட்ட வளாகத்தில் பயன்பாட்டுக்கு இருந்த அனைத்து பொருள்களையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
Polis menahan 10 individu termasuk warga China, Myanmar, Bangladesh dan tempatan kerana memproses sisa elektronik secara haram di Ladang Sungai Puluh. Rampasan melibatkan 280 tan tembaga, 60 tan aluminium, mesin, forklift dan kontena bernilai RM18.7 juta.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *