பினாங்கில் பிரமாண்ட பொங்கல்!

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், ஜன 20: பினாங்கு பத்து உபானில் நேற்று நடைபெற்ற பொங்கல் கலாச்சார விழாவின் சிறப்பம்சமாக 21 மாட்டு வண்டிகள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அலங்காரத் தோரணையுடன் சாலையில் அணிவகுத்துச் சென்றது தமிழர் திருநாளின் மாண்புக்குச் சான்றாய் அமைந்தது. 

தாமான் பிரவுனில் இருந்து குளுகோர் இளைஞர் மற்றும் விளையாட்டு வளாகம் வரை நடைபெற்ற இந்த அணிவகுப்பில் பல்வேறு பின்னணியில் இருந்தும் மாநில உயரதிகாரிகள் உட்பட 2,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

அறுவடைத் திருநாள், உழவர் திருநாள் என இயற்கையைப் போற்றும் தமிழர்தம் பண்பாட்டின் அடையாளமாய் நடைபெற்ற இந்நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த 17 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய மரப் பொங்கல் பானை, மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

மரத்தால் செய்யப்பட்டு, 200 கிலோ  பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பிரமாண்ட பானையை அலங்கரிக்க மூன்று நாட்கள் ஆனதாக பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *