வெட்டு மரம் குத்தகையில் RM1 மில்லியன் லஞ்சம் பெற்றதாக ஐவர் கைது!

top-news

பிப்ரவரி 6,

நாட்டின் பாதுகாக்கப்பட்ட BALAK மரங்களை வெட்டுவதற்கானக் குத்தகையில் சுமார் 1 மில்லியன் ரிங்கிட் வரையில் லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் 3 அரசு அதிகாரிகள் உட்பட ஐவர் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2016 முதலானக் குத்தகையில் பல்வேறு விதிமீறல் நிகழ்ந்திருப்பதாகவும் பாதுகாக்கப்பட்ட காடுகளிலிருந்து மரங்களை வெட்ட அனுமதி வழங்குவது கட்டுப்பாடுகளை மீறி மரங்களை வெட்ட அனுமதிக்க 1 மில்லியனுக்கும் மேலானத் தொகை லஞ்சமாகப் பெறப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆண்கள் 1 பெண் என தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு எதிரான விசாரணையில் ஆவணங்களைத் திரட்டி வருவதாகவும் போதிய ஆவணங்களையும் மேலதிக விசாரணையை மேற்கொள்ளவும் கைது செய்யப்பட்டிருக்கும் ஐவரையும் 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கும்படி ஜொகூர் பாரு Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Lima individu termasuk tiga penjawat awam ditahan kerana disyaki menerima rasuah RM1 juta bagi mendapatkan kebenaran pembalakan di kawasan hutan terlindung. Mereka direman tujuh hari untuk siasatan lanjut oleh SPRM.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *