நெடுஞ்சாலை கட்டுமான ஊழல்! அரசு அதிகாரிகள் 8 பேர் கைது!

top-news

பிப்ரவரி 5,

நெடுஞ்சாலை குத்தகை தொடர்பாகப் பணமோசடி செய்த 5 அரசு அதிகாரிகளையும் 3 குத்தகையாளர்களையும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் சரவாக் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அரசு நிதி மேம்பாட்டுத் திட்டங்களில் சம்மந்தப்பட்டுள்ளதாக 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் அவர்களை 4 நாள்கள் விசாரணைக் காவலில் தடுத்து வைக்கும்படி Majistret நீதிமன்றம் உத்தரவிட்டது.

20 முதல் 60 வயதுக்குற்பட்ட 8 பேரிடமிருந்து சொகுசு வாகனங்களையும் RM450,000 ரொக்கத்தையும், நகைகளையும் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் சம்மந்தப்பட்ட நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு குத்தகைகள் குறித்தான ஆவணங்களையும் திரட்டி வருவதாகவும் தற்போது நடைமுறையில் உள்ள குத்தகைகளையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Datuk Seri Ahmad Khusairi Yahaya தெரிவித்தார்.

Lapan individu termasuk lima pegawai kerajaan dan tiga kontraktor ditahan SPRM berhubung penyelewengan dana projek lebuh raya di Sarawak sejak 2006. Mahkamah Majistret membenarkan reman empat hari sementara SPRM merampas wang tunai RM450,000, kenderaan mewah dan dokumen berkaitan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *