புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 14 குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்! - லாவனியா கணபதி வேண்டுகோள்!

- Sangeetha K Loganathan
- 16 Jan, 2025
ஜனவரி 16,
மலேசிய குழந்தைகள் புற்றுநோய் இயக்கமான Persatuan Kanser Kanak-Kanak Malaysia (CCAM) புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 14 குழந்தைகளைக் காப்பாற்ற நிதியுதவியை நாடுவதாகத் தெரிவித்தார். 14 குழந்தைகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் சிகிச்சைக்காக RM 1.8 மில்லியன் நிதி தேவைப்படுவதாகவும் தமது அமைப்பின் மூலமாக நிதி சேகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Pertubuhan Kanser Kanak-Kanak Malaysia
Hong Leong Bank
21400086276
மலேசியாவில் ஓராண்டுக்கு 800 க்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சிகிச்சை அளிக்க முடியாமல் 35% குழந்தைகள் பலியாவதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் 95% சிகிச்சை பெற்று வரும் நிலையில் மலேசியாவில் 65% குழந்தைகள் மட்டுமே சிகிச்சை பெறுவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மலேசிய குழந்தைகள் புற்றுநோய் இயக்கமான Persatuan Kanser Kanak-Kanak Malaysia (CCAM) இதுவரையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 80 குழந்தைகளுக்குச் சிகிச்சையளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Persatuan Kanser Kanak-Kanak Malaysia (CCAM) merayu sokongan segera untuk mengumpul RM1.8 juta bagi membantu rawatan 14 kanak-kanak penghidap kanser termasuk kos rawatan khas di luar negara. Dana diperlukan segera bagi menyelamatkan nyawa mereka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *