தேசத் துரோகக் குற்றச்சாட்டு! - சனூசி விடுவிக்கப்பட்டார்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், பிப் 24: கெடா மந்திரி பெசார் சனுசியை 16-ஆவது மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவுக்கு எதிராக தேசத்துரோகக் கருத்துக்களைத் தெரிவித்த குற்றச்சாட்டில் இருந்து உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

சனுசியின் பிரதிநிதித்துவங்களை சட்டத்துறை அலுவலகம் ஏற்றுக்கொண்டதாக துணை அரசு வழக்கறிஞர் மஸ்ரி தாவூத் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததை அடுத்து நீதிபதி அஸ்லம் ஜைனுதீன் இந்த தீர்ப்பை வழங்கினார்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதன் மூலம், 2023 ஆம் ஆண்டு ஆட்சியாளர்கள் குறித்து அவர் மீது சுமத்தப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

ஜூலை 11, 2023 அன்று கோம்பாக்கில் உள்ள ஒரு செராமாவில் சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா மற்றும் அல்-சுல்தான் அப்துல்லா ஆகியோருக்கு எதிராக தேசத்துரோகக் கருத்துக்களை சனூசி  வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *