கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு இலவச டோல் சேவை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 21: கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு  டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நாடு முழுவதும் இலவச டோல் சேவையை அரசாங்கம் அறிவித்துள்ளது, இருப்பினும் இது வகுப்பு 1 வாகனங்களாக வகைப்படுத்தப்பட்ட சொந்த கார்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 23 திங்கட்கிழமை நள்ளிரவு 12.01 மணி முதல், மறுநாள் இரவு 11.59 மணி வரை அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இந்த இலவச சேவை அமல்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி  தெரிவித்தார்.

 இருப்பினும், நாட்டின் எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் மற்றும் தஞ்சோங் குபாங் சுங்கச்சாவடிகளுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியால் அரசாங்கத்திற்கு ரிங்கிட் 38 மில்லியன் செலவாகும் என்று நந்தா தெரிவித்துள்ளார்.

 வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும் முன், MyPLUS-TTA பயன்பாட்டைப் பயன்படுத்தவும், அவர்களின் டச் 'என் கோ கார்டு அல்லது இ-வாலட்டில் போதுமான இருப்பு இருப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இதற்கிடையில், மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (எல்எல்எம்) தலைமை இயக்குநர் சசாலி ஹருன் , முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காகவும், ஆண்டு இறுதி பள்ளி விடுமுறைக்காகவும் பயணிகள் தீபகற்பம் முழுவதும் பயணிப்பதால், தினமும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *