மோட்டார் சைக்கிளில் 65 வயது முதியவரை மோதிய 15,13 வயது இரு சிறுவர்கள்!

top-news

பிப்ரவரி 15,


சாலையோரத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த முதியவரை மோதி நிறுத்தாமல் சென்ற மோட்டார் சைக்கிள் தொடர்பான வழக்கில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியது 13 வயது 15 வயது சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக Kota Setar, மாவட்டக் காவல் ஆணையர் Siti Nor Salawati Saad தெரிவித்தார். 

65 வயது முதியவர் சாலையைக் கடக்கும் போது மற்றொரு வாகனம் நின்று வழி விட்ட நிலையில் மற்றொரு மோட்டார் சைக்கிள் திடிரென முதியாரை மோதி நிறுத்தாமல் சென்றதாகவும் பாதிக்கப்பட்ட முதியவர் பலத்த காயத்திற்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியது 15 வயது 13 வயது எனும் இரு சிறுவர்கள் என அவர் தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட இருவரிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களிடம் மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக Kota Setar மாவட்டக் காவல் ஆணையர் Siti Nor Salawati Saad தெரிவித்தார்.

Dua remaja lelaki berusia 15 dan 13 tahun melarikan diri selepas melanggar seorang wanita warga emas di hadapan Masjid Zahir, Alor Setar. Mangsa mengalami kecederaan dan menerima rawatan di hospital. Kes disiasat termasuk terhadap pemilik motosikal kerana membenarkan pemanduan tanpa lesen.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *