மலாய்க்காரர்கள் தங்கள் கண்ணியத்தை அடகு வைக்கத் தயாரா?முக்ரிஸ்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜன 6:

மலாய் ஒற்றுமையின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்காக ஒற்றுமையாக ஒரு கூட்டத்தை நடத்த விரும்புவது தமக்கு விசித்திரமாக இருப்பதாக பெஜுவாங் தலைவர் முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.

2018 பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் மற்றும் அம்னோவின் வீழ்ச்சிக்கு நஜிப் காரணம் என்றும், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதன் மூலம் மலாய்க்காரர்களின் இமேஜை நஜிப் அழித்துவிட்டார் என்றும் முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த உண்மையை மலாய் சமூகம் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.ஒரு நபருக்காக மலாய்க்காரர்கள் தங்கள் கண்ணியத்தை அடகு வைக்கத் தயாராக இருக்கிறார்களா என்று முக்ரிஸ் கேள்வி எழுப்பினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *