இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
- Surendran Sumdraraj
- 21 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 21-
மலேசிய வானிலைத் துறை (MetMalaysia) இன்று மாலை 5 மணி வரை நாட்டின் சில கடல்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் 1 மணியளவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பேராக் மாநில கடல்பகுதிகளில், கரையிலிருந்து சுமார் 24 கடல் மைல் தூரத்தில் இந்த மோசமான வானிலை நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடலில் அலைகள் 3.5 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும் என்றும் வானிலைத் துறை குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய நிலைமைகள் சிறிய படகுகளுக்கும், கடலில் மீன்பிடி செயலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் மிகவும் ஆபத்தானதாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், கடலுக்கு செல்லும் முன் மீனவர்கள் மற்றும் கடல்சார் செயலில் ஈடுபடுபவர்கள் வானிலை தகவல்களை கவனமாக பின்பற்ற வேண்டும் என்றும், தேவையற்ற ஆபத்துகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



