அடுத்த மாதத்திலிருந்து இறக்குமதிப் பழங்களின் விலைகள் அதிகரிக்கும்!

- Muthu Kumar
- 24 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 24-
ஜூலை முதல் தேதியிலிருந்து பல்வேறு வகையான செலவுத் தொகைகள் அதிகரிக்க இருப்பதைத் தொடர்ந்து இறக்குமதிப் பழங்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கலாம் என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதியாளர்கள் மூன்று முனைகளில் கூடுதலான செலவுத்தொகையை எதிர்கொள்ளவுள்ளனர். இறக்குமதி பழங்கள் மீது ஐந்து விழுக்காடு விற்பனை மற்றும் சேவை வரி விதிப்பு, போர்ட் கிள்ளானில் சரக்குக் கட்டணம் 30 விழுக்காடாக உயர்வு காண்பது. தீபகற்ப மலேசியாவில் மின்சாரக் கட்டண உயர்வு போன்றவற்றால் வர்த்தகர்களின் செலவு அதிகரிக்கவுள்ளது என்று கோலாலம்பூர் பழ மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சின் நியூக் மோய் தெரிவித்தார்.
பெரும்பாலான இறக்குமதிப் பழங்களுக்கு ஐந்து விழுக்காடு முதல் முப்பது விழுக்காடு வரை இறக்குமதி தீர்வை விதிக்கப்படவுள்ளது. தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து தருவிக்கப்படும் பழங்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும். இதர செலவுகளையும் சேர்த்தால், ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், திராட்சை போன்ற பழங்களின் விலைகள் ஜூலை முதல் தேதிக்குப் பிறகு வெகுவாக உயரலாம் என்றார் சின்.
கூடுதல் வரி விதிப்பு மின்சாரக் கட்டண உயர்வு குளிர்பதன சேமிப்புக் கிடங்கு நடத்துனர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமது சொந்த குளிர்பதனக் கிடங்கிற்கு மட்டும் மாதமொன்றுக்கு சுமார் அறுபதாயிரம் வெள்ளி மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.
எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி போக்குவரத்துக்கும் மின்சாரத்திற்கும் கூட விதிக்கப்பட்டுள்ளது. இது செலவுத்தொகையை அதிகரித்து விற்பனையை மட்டுப்படுத்தும். பழங்கள் ஆடம்பரப் பொருட்கள் அல்ல. அவை அன்றாட தேவைக்கானவையாகும். காய்கறிகளுக்கு எஸ்எஸ்டி வரித் திட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. பழங்களுக்கும் இத்தகைய விலக்களிப்பை வழங்க வேண்டும். வெள்ளரிக்காய்களின் இடத்தை ஆப்பிள்கள் நிறைவு செய்ய முடியாது. அவாகாடோஸ் போன்ற பழங்கள் முன்பு விசேஷமாகக் கருதப்பட்டு வந்தன. ஆனால், இப்போது எல்லா பேரங்காடிகளிலும் அதனைப் பரவலாக பார்க்க முடியும் என்று சின் குறிப்பிட்டார்.Mulai 1 Julai, harga buah import dijangka meningkat disebabkan cukai jualan 5%, caj pelabuhan dan kenaikan tarif elektrik. Peniaga bimbang kos penyimpanan sejuk turut meningkat. Persatuan mohon pengecualian cukai untuk buah-buahan seperti sayur-sayuran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *