மார்ச் மாதத்தில் காய்கறிகளின் விலை சீராகும்! – அமைச்சர் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

தும்பாட், டிச 18: வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில், உள்ளூர் சந்தையில் காய்கறிகளின் விலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீரற்ற வானிலை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, விற்பனை விலை அதிகரித்ததாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

ஒவ்வொரு முறை பருவமழை வரும்போதும் இந்தப் பிரச்னை ஏற்படும் என்று குறிப்பிட்ட அவர்,  சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலை உயர்வு குறித்து தங்களுக்குத் தகவல்கள் வந்துள்ளதாகக் கூறினார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்,  மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் காய்கறிகள் போதுமான அளவு வழங்கப்படுவதை உறுதி செய்வதில் மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையமான FAMA முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *