புதிய செனட்டர்களுக்கு பிரதமர் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, டிசம் 4: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இரண்டாவது முறையாக செனட்டர்களாக மூன்று அமைச்சர்களை மீண்டும் நியமித்ததை வரவேற்றுள்ளார்.

அமைச்சர்கள் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில், டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காதிர் மற்றும் டத்தோ டாக்டர் முகமது நயிம் மொக்தார் ஆகியோருக்குத் தனது பாராட்டுகளை அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் புதிய பதவிக்காலம் இன்று முதல் டிசம்பர் 2, 2028 வரை அமலில் இருக்கும்.

மறு நியமனங்கள் அமைச்சர்கள் கொள்கை தொடர்ச்சி மற்றும்  முக்கிய பொறுப்புகளைத் தொடர உதவும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வனமான மற்றும் விவேகமான மதிப்பாய்வுக்குப் பிறகு பிரதமர் மதனி அரசாங்க அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் பட்டியலை இறுதி செய்வார் என்று  பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *