பிரதமர் அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் சீர்குலைந்து போகும் அபாயம்-அஸ்மி ஷசான்!

- Muthu Kumar
- 16 Dec, 2024
பெட்டாலிங் ஜெயா:
மலாய் அரசியல் அதிகாரத்தைக் காப்பாற்ற டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் இடையேயான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பிரதமர் அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கம் சீர்குலைந்து போகும் அபாயம் இருப்பதாக நுசாந்தரா அகாடமியைச் சேர்ந்த அஸ்மி ஷசான் தெரிவித்துள்ளார்.
அன்வாரின் அரசாங்கம் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.மக்களிடையே முரண்பாடுகளை விதைத்து தேசிய ஒற்றுமையை அச்சுறுத்தும் அபாயம் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலாய்க்காரர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் இடையே குழுவாக பெரும் விளைவை ஏற்படுத்தலாம் என்று குறிப்பிட்ட அவர், இது வாக்காளர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் என்று FMT-க்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழன் அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் கூறுகையில், "மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக" மலாய்க்காரர்களின் "பொது எதிரியை" எதிர்க்க தானும் PN தலைவர்களும் ஒன்றாக வர ஒப்புக்கொண்டதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.அன்வாரின் அரசாங்கத்தின் கீழ் மலாய்க்காரர்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்ஷ்பட்டதாக அவர் கூறினார், மலாய் சமூகத்தை வென்றெடுப்பதற்காக அவர்களை ஒன்றிணைக்க தூண்டியது என்று அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *