தனியார் நிறுவனங்கள் உதவ முன்வாருங்கள்! அன்வார் வேண்டுகோள்

- Shan Siva
- 02 Dec, 2024
புத்ராஜெயா, டிச 2: நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி மற்றும் தன்னார்வ உதவி மூலம் உதவுவதற்கான முயற்சிகளில் தனியார் நிறுவனங்கள் இணைய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று வலியுறுத்தினார்.
வெற்றி பெற்ற
தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் கவனத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவுவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள்
எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பாருங்கள்: அவர்களின் வறுமை, அவர்களின் கஷ்டங்கள் அதையெல்லாம் அவர்கள் எப்படி
எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுமையுடன் உணர்ந்து அதர்கு நிவர்த்தி காணுங்கள் என்று பிரதமர் துறையின்
ஊழியர்கள் கூட்டத்தில் அவர் கூறினார்.
குறிப்பாக
கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அரசு அமைப்புகள், பாதுகாப்புப் படைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட்ட குழுக்களின்
தயார்நிலையையும் அன்வார் பாராட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *