வெள்ள நிவாரணத்திற்குற்கு தனியார் துறை நிறுவனங்கள் RM35 மில்லியனுக்கு உதவி-அன்வார்!

- Muthu Kumar
- 04 Dec, 2024
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனியார் துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் RM35 மில்லியனுக்கும் அதிகமான உதவிகளை வழங்கவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
Permodalan Nasional Bhd, Petronas மற்றும் Pharmaniaga Bhd போன்ற அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே RM10 மில்லியன் உதவிகளை வழங்கியுள்ளதாக அன்வார் கூறினார்.டேவான் நெகாராவில் சப்ளை பில் 2025ஐ தாக்கல் செய்யும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த திங்களன்று, தனியார் நிறுவனங்களை நிதியுதவி மற்றும் தன்னார்வ ஆதரவின் மூலம் நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளில் சேருமாறு அன்வார் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *