தம்பதியர் பலியாகக் காரணமான கார் ஓட்டுநர் மீது இன்று கொலை குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 15: இந்த மாத தொடக்கத்தில் ஜாலான் அம்பாங் சாலையில் நடந்த ஒரு விபத்தில் தம்பதியினரைக் கொலை செய்ததாக, 24 வயதான இளைஞர் ஒருவர் மீது இன்று இங்குள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.


மே 2 ஆம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணியளவில், அம்பாங் பாயிண்ட்டை நோக்கிச் செல்லும் ஜாலான் அம்பாங் சாலையில், 61 வயதான . துரைசிங்கம் மற்றும் அவரது மனைவி 56 வயதான . மேனகா ஆகியோரைக் கொலை செய்ததாக டேனிஷ் ராமன் கமார் குமாரேசன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், நீதித்துறை நடுவர் நூருல் இஸ்ஸா ஹசன் பஸ்ரி முன்னிலையில் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.


குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.


பிரேதப் பரிசோதனை அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக ஆகஸ்ட் 17 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *