இராணுவ வீரர் விபத்தில் மரணம்! - கார் ஓட்டுநர் கைது
- Shan Siva
- 27 May, 2026
கோலாலம்பூர், மே 27: கோலாலம்பூர், டேசா பண்டான் அருகே திங்கள்கிழமை காலை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் சம்பந்தப்பட்ட ஒரு கொடிய சாலை விபத்து தொடர்பாக, பிஎம்டபிள்யூ செடான் காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலை சுமார் 8.30 மணியளவில், பாதிக்கப்பட்டவர் கம்போங் பண்டான் வட்டச்சந்தியிலிருந்து டேசா பண்டானைநோக்கி, ஜாலான் கம்போங் பண்டான் சாலையின் இடது பாதையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் தலைவர் சம்சுரி இசா கூறுகையில் தெரிவித்தார்.
ஒரு சந்திப்பிலிருந்து கார் சாலைக்குள் திரும்பியபோது, மோட்டார் சைக்கிள் அந்த வாகனத்தின் வலது பக்கத்தில் மோதியதாக அவர் கூறினார்.
45 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதுஎன்று சம்சுரி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதனை அடுத்து 44 வயதான ஓட்டுநர் நேற்று கைது செய்யப்பட்டார், மேலும் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் மற்றும் மதுபானப் பயன்பாடு இல்லை எனத் தெரியவந்தது.
அலட்சியமாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



