மற்றொரு ஜேஜு ஏர் விமானத்திலும் சிக்கல்! கியர் பிரச்னை காரணமாக திரும்பியது!

- Shan Siva
- 30 Dec, 2024
சியோல், டிச 30: தென்கொரிய விமானமான ஜேஜு ஏர் விபத்துக்குள்ளாகி ஒரு நாள் மட்டுமே ஆன நிலையில், இன்று சியோலில் இருந்து மற்றொரு ஜெஜு ஏர் விமானம் தரையிறங்கும் போது கியர் சிக்கலை எதிர்கொண்டதால் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பீதி நிலவியது.
சியோலின் ஜிம்போ
சர்வதேச விமான நிலையத்திலிருந்து "காலை 6.37 மணியளவில் ஜேஜு தீவிற்கு புறப்பட்ட ஜேஜு ஏர் விமானம் 7 சி 101, புறப்பட்ட சிறிது நேரத்திலேய கியரில் சிக்கலைக் கண்டறிந்த
பின்னர், காலை 7.25 மணிக்கு ஜிம்போவுக்குத் திரும்பியது"
என்று தென் கொரிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம்
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தின்
கண்காணிப்பு அமைப்பில் தரையிறங்கும் கியர் சிக்கலைக் குறிக்கும் சிக்னல்
கண்டறியப்பட்டது என்று ஜேஜு ஏர்
நிர்வாக ஆதரவு அலுவலகத்தின் தலைவர் சாங் கியுங்-ஹூன் செய்தியாளர் கூட்டத்தில்
தெரிவித்தார்.
காலை 6.57 மணிக்கு, கேப்டன் தரைக் கட்டுப்பாட்டுடன் தொடர்பு கொண்டார், மேலும் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்த பிறகு,
தரையிறங்கும் கியர் இயல்பு நிலைக்குத்
திரும்பியது. இருப்பினும், விமானத்தை
முழுமையாக ஆய்வு செய்வதற்காக விமான நிலையத்திற்குத் திரும்ப முடிவு செய்யப்பட்டதாக
அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *