போர்ட்டிக்சன் கடலில் முதலை-அதிகாரிகள் எச்சரிக்கை!

- Muthu Kumar
- 03 Feb, 2025
போர்ட்டிக்சன், பிப். 3-
போர்ட்டிக்சனின் பந்தாய் செர்மின் கடற்கரைப் பகுதியில் முதலையொன்றின் நடமாட்டம் தென்பட்டுள்ளது என்று நெகிரி செம்பிலான் வனஉயிரியல் மற்றும் தேசியப் பூங்காத்துறை அறிவித்துள்ளது.
பந்தாய் செர்மின், மங்கிபே எனும் இடத்தில் அந்த முதலையைப் பொதுமக்கள் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, எங்களின் அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.அங்கு முதலையொன்று நீந்திக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர்.அதன் நீளம் சுமார் இரண்டு மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அத்துறையின் இயக்குநர் ஃபைஸால் இஸாம் பிக்ரி குறிப்பிட்டார்.
கடற்கரையிலிருந்து சுமார் ஐம்பது மீட்டர் சுற்றளவுக்குள் அந்த முதலை சுற்றிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கடல்மட்டம்
குறையும்போது அதனைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. காண்டா மரங்கள் கொண்ட சதுப்பு நிலத்தில் முதலையைப் பிடிப்பதற்காக பொறி வைத்துள்ளோம். பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த விலங்கிற்கு சினமூட்டும் வகையில் நடந்த கொள்ள வேண்டாமென்றும் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார் ஃபைஸால்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *