ஜனவரி 1 முதல், 8 மில்லியன் பயனர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள் பதுவு செய்யப்பட்டதாக கருதப்படும்! - MCMC
- Shan Siva
- 15 Dec, 2025
கோலாலம்பூர், டிச 15: மலேசியாவில் எட்டு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள் சேவைகள் வழங்கும் நிறுவனங்களாகக் கருதப்படுவார்கள் என்று மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையமான MCMC தெரிவித்துள்ளது.
இதில் வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டோக் மற்றும் யூடியூப் ஆகியவை அடங்கும்.
பெரிய அளவிலான சேவை
வழங்குநர்கள் மலேசியாவின் சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் செயல்படுவதை
உறுதி செய்வதற்காக, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச்
சட்டம் 1998 இன் கீழ் உள்ள முறைப்படியான விதிமுறைகளை இது வழங்குவதாக ஆணையம்
கூறியது.
இந்த முயற்சி
சம்பந்தப்பட்ட அனைத்து தளங்களும் பயனர் பாதுகாப்பிற்கான தெளிவான பொறுப்பை
ஏற்கின்றன, குறிப்பாக குழந்தைகள்
மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பதில் என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது சேவை வழங்குநர்களின்
உலகளாவிய செயல்பாடுகளில் தலையிடாது என்றும், பெரிய அளவிலான ஆன்லைன் தளங்களை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக்
கொண்ட சர்வதேச நடைமுறைகளுடன் அதன் அணுகுமுறை ஒத்துப்போகும் என்றும் MCMC மேலும் கூறியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



