கிள்ளானில் கொள்ளை! RM 50,000 நகையைப் பறிகொடுத்த பெண்!

top-news

பிப்ரவரி 12,

கிள்ளானில் உள்ள Bandar Parklands கடையில் முகமூடி அணிந்த ஆடவர் இரு பெண்களிடமிருந்து RM 50,000 மதிப்பிலான நகையைக் கொள்ளை அடித்ததாகத் தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Cha Hoong Fong தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 28 வயது கடையின் உரிமையாளரும் 59 வயது வாடிக்கையாளரும் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கொள்ளையின் போது பதிவு செய்யப்பட்ட CCTV காணொலியின் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

கடந்த திங்கட்கிழமை நண்பகல் 2 மணியளவில் இக்கொள்ளை சம்பவம் நிகழ்ந்ததாகவும், கொள்ளை அடித்த ஆடவரின் வாகனம் கடைக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் வாடிக்கையாளர் கடைக்குள் நுழையும் வரையில் காத்திருந்து கொள்ளையடித்ததாகத் தெரிய வந்துள்ளது. கொள்ளையடித்த ஆடவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் அவர் பயன்படுத்திய Proton X50 வாகனத்தின் பதிவு எண் போலியானது என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என தென் கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் Cha Hoong Fong தெரிவித்தார்.

Seorang lelaki bertopeng merompak barang kemas bernilai RM50,000 dari dua wanita di sebuah kedai di Bandar Parklands, Klang. Suspek bersenjata menunggu pelanggan masuk sebelum bertindak. CCTV membantu siasatan dan nombor pendaftaran Proton X50 yang digunakan adalah palsu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *